தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை!

வாசுதேவன்

UPDATED: May 20, 2023, 7:19:06 PM

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்,தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையர் கொ.வீரராகவ ராவ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலஷ்மி மதுசூதனன்,செங்கல்பட்டு நகராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன்,

ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, கூடுதல் இயக்குநர்கள் டி.ராஜசேகர், சி.ரவிச்சந்திரன்,.மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஆர்.ராஜ்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மு.தனசேகரன், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா ஜெயசங்கர், வேண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜி.திருமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended