குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி பியூன் கைது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னையில் ஒன்றாம்வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்த அதேபள்ளியின் பியூன் போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவரின் 5 வயதுமகள் தனியார்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்தமாதம் 29 ஆம் தேதியிலிருந்து அந்த சிறுமிக்கு உடல் நிலை சரி இல்லாததால் பள்ளிக்குச்செல்ல வில்லை.
தற்போது உடல் நிலை சீரடைந்தநிலையில் நேற்றுகாலை சிறுமியை பெற்றோர்பள்ளிக்கு அனுப்ப தயாா் படுத்தி உள்ளனா்.
ஆனால் அந்த சிறுமி பள்ளிக்கு செல்லபயந்து அழுது உள்ளார்.
அதோடு அந்த பள்ளிக்கு நான்போக மாட்டேன் வேறுபள்ளிக்கு அனுப்புங்கள் என்று சிறுமி அடம் பிடித்து உள்ளார்.
இதை அடுத்து சிறுமியிடம் பெற்றோர் நைசாகபேசி விசாரித்தனா்.
அப்போது சிறுமி படித்த அந்தபள்ளியின் பியூன் ராஜ் (வயது 38) என்பவா் கட்டிப் பிடித்து பாலியல்தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சிறுமியின்பெற்றோா் பள்ளிக்குசென்று நிர்வாகத்திடம் புகாா் செய்து உள்ளனர் ஆனால் பள்ளிநிர்வாகம் சரிவர பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் சம்மந்தப் பட்ட பள்ளிக்குச்சென்று பியூன்ராஜிடம் விசாரணைநடத்தியதில் சிறுமியின் பெற்றோர்கள் அளித்தபுகார் உண்மை என தெரியவந்து உள்ளது.
பின்னர் ராஜியை கைதுசெய்த பெரும்பாக்கம் போலீசார் அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவுசெய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்
க. துர்கா மதன்குமார்