- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பிரசாந்த் என்பவர் பெருமாள் ஏரியில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக மூழ்கி பலி.
பிரசாந்த் என்பவர் பெருமாள் ஏரியில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக மூழ்கி பலி.
இடும்பன்
UPDATED: May 11, 2023, 7:19:31 PM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு காலணி வடக்கு தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் பிரசாந்த் (வயது 16). இவர் வேகாக்கொல்லை யில் உள்ள முந்திரி கம்பெனியில் தூசி அல்லும் வேலை செய்து வந்தார்.
வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது அரசடிகுப்பத்தில் உள்ள பெருமாள் ஏரியில் மதியம் 2 மணி அளவில் நீரில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக குளத்தில் பிரசாந்த் மூழ்கினார்.
இது குறித்த தகவல் அறிந்த காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ஏரியில் மூழ்கிய பிரசாந்தின் உடலை ஏரியில் தேடினர். வெகுநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் பிரசாந்தை சடலமாக மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.