கும்பகோணம் மூப்பகோயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் மர்மமான முறையில், வளையப்பேட்டை திடலில் இறந்து கடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே 1வது வார்டு கொட்டையூர் மூப்பகோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்பவருடைய மகன் பிரகாஷ் (22), இவர் தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்து வருகிறார்
இந்நிலையில் நேற்று இரவு வளையபேட்டை பகுதியில் உள்ள ஒரு திடலில் உடலில் எந்தவித காயங்களும் இன்றி மர்மமான முறையில் இறந்து கிடந்தார் அவ்வழியாகச் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவலயறிந்த சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
நேற்றிரவு நண்பர்களுடன் நடந்த சண்டையில் இறந்தாரா இல்லை வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங்களில் பிரகாஷ் மரணத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்