Author: லியோ

Category: அரசியல்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பைபாஸ் அருகில் நாம் தமிழர் கட்சியின் 65 அடி உயர கொடி கம்பத்தில் புலி கொடியை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்து பின்னர் கட்சி செய்தியாளரிடம் பேசும் போது தஞ்சாவூர் “டாஸ்மாக்கில் குடித்தது மது அல்ல அது சைனட் கலந்தது என மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.

டாஸ்மாக்கில் இப்போது மதுபானம் சாமானிய மனிதர்களால் குடிக்க முடியாததால் தான் குறைந்த விலைக்கு கிடைக்க கூடிய கல்லை தேடியும் செல்கிறார்கள்.

பாண்டிச்சேரி உட்பட அனைத்து மாநில அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கல் இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் ஏன் திறக்கக் கூடாது.

ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அவர் சகோதரி கனிமொழி உள்ளிட்ட அனைவரும் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக்கை ஒழிப்போம் என வாக்குறுதி அளித்தனர் ஆனால் இதுவரை வாய் திறக்கவில்லை.

தற்போது புதிய பாராளுமன்றம் திறப்பதற்காக செங்கோல் கொடுப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை. ஏற்கனவே முன்னாள் பிரதமர் நேருவிற்கு செங்கோல் கொடுக்கப்பட்டது, இதனால் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும் இன்று வரை இல்லை.

தமிழர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்று இவர்கள் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு என்று போலியாக பேசுகிறார்கள்.

செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனை ஏன் உள்ளே வைக்காமல் வெளியே நிறுத்தி உள்ளார்கள்.

ராஜராஜ சோழன் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினான். ஆனால் தற்பொழுது குடியாட்சியில் முடியாட்சி நடக்கிறது. அதுவும் கொடுங்கோல் ஆட்சியாக நடக்கிறது.

செங்கோலை கொடுக்கும் போது ஆதீனங்கள் தேவாரம் பாடும் போது ஏன் இன்னும் பெரிய கோவிலில் உள்ளே தேவாரம் பாடவில்லை. தஞ்சாவூர் பெரிய கோயிலில் தேவாரத்தை ஒரு வேலையாவது பாட சொல்லுங்கள்.

வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் பையை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் கையில் பையை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமானவரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே.

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்.

இதேபோல் எத்தனையோ அதிகாரிகள் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது அனைவருமே பண பலம் படைத்தவர்கள் இது போல் யாரும் செய்தது கிடையாது.

அதிகாரமும், அதிகாரமும் மோதுகிறது பேய்க்கும், பேய்க்கும் சண்டை போல நம் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.

Tags:

#Thanjavurnewstoday , #seeman #சீமான் #seemanlatestspeech #namtamilarkatchi #ntk #Thanjavurnewspapertoday , #tasmac #dmk #bjp #Thanjavurnewspaper, #Thanjavurnewschannel , #Thanjavurnewsupdate, #Thanjavurlatestnews, #Thanjavurnews , #Thanjavurnewstodaylive , #Thanjavurlatestnews, #papanasamnewstoday #papanasamnews #papanasam #latestnewsinthanjavur , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தஞ்சை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu ,
Comments & Conversations - 0