• முகப்பு
  • crime
  • ஆட்டோ ஓட்டுனர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.

ஆட்டோ ஓட்டுனர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் ஆலவெளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36) இருவரும் திருப்பனந்தாள் பேருந்து நிலையம் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்டு வாய் தகராறில் ராஜ்குமார் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரது நண்பர் மது போதையில் ராஜேஷ் அருகில் இருசக்கர வாகனத்திலிருந்த பெட்ரோலை எடுத்து ராஜ்குமார் உடல் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது தொடை கால் கை பகுதி முழுவதும் தீக்காயம் ஆயின. ஆபத்தான நிலையில் இருந்த ராஜ்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended