• முகப்பு
  • pondichery
  • பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக உருவெடுத்திருக்கிறது பாண்டிச்சேரி.

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நகரமாக உருவெடுத்திருக்கிறது பாண்டிச்சேரி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி மூத்த செய்தியாளர் ஜஸ்டின் அவர்களின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது..! ‌ புதுச்சேரியில் அன்மை காலமாக செய்தியாளர்களுக்கு எதிரான விரும்பத்தகாத செயல்கள் அதிகரித்து வருகிறது, தினமலர் மூத்த செய்தியாளர் ஜஸ்டின் அவர்கள் வில்லியனூர் பகுதியில் வசித்து வருகிறார், இன்று ஜஸ்டின் அவர்களின் வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அவருடைய கார் கண்ணாடிகளை மர்ம கும்பல் அடித்து உடைத்துள்ளனர். இதில் கார் சேதம் அடைந்து உள்ளது, இந்த வன்முறை சம்பவத்திற்கு புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் சார்பில் கண்டத்தை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்த சமுக விரோத கும்பலை உடனடியாக போலீஸார் கைது கைது செய்யுமா ? த.சிவா, தலைவர் புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம். பாண்டிச்சேரி செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended