• முகப்பு
  • அரசியல்
  • ஆரணி அருகே களம்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என உறுப்பினர் சேர்க்கை முகாமில் போளூர் எம்எல்ஏ வாக்குறுதி.

ஆரணி அருகே களம்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என உறுப்பினர் சேர்க்கை முகாமில் போளூர் எம்எல்ஏ வாக்குறுதி.

மனோஜ் குமார்

UPDATED: May 31, 2023, 12:55:31 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போளூர் வட்டம் களம்பூர் பேரூராட்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது முகாமிற்கு களம்பூர் பேரூராட்சி நகர செயலாளர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர்களிடம் உறுப்பினர் படிவம் கொடுத்து ஆவணங்கள் பெற்றுக் கொண்டு கையொப்பம் வாங்கினார்.

மேலும் செய்தியாளர்கள் களம்பூர் பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைக்க கேள்வி கேட்டதற்கு இன்றைய திமுக ஆட்சியில் எது கேட்டாலும் நடப்பதில்லை தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை ஆகையால் சட்டமன்றத் தொகுதி நிதியில் வருடத்திற்கு ஒதுக்கப்படும் 3 கோடி ரூபாய் பணத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் களம்பூர் பேரூராட்சியில் மிகவும் சிறப்பான முறையில் பேருந்து நிலையம் இடம் தேர்வு செய்து கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மேலும் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அழைத்து உடனடியாக பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் பாலாஜி துரை முருகன் பாஸ்கரன் வாசு டைலர் பிரகாஷ் அகமதுஷரீப் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட உறுப்பினர்களாக சேர இருந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended