பிளஸ் டூ மாணவன் வெட்டிப் படுகொலை ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் டி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரை என்பவரின் மகன் கோகுல்ராஜ் வயது 17 பிளஸ் டூ படித்து வருகிறார் இந்நிலையில் திருக்கோவிலூர் டி கீரனூர் புறவழிச்சாலையில் பிளஸ் டூ மாணவன் கோகுல்ராஜ் என்பவரை கத்தியால் கழுத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு அங்கேயே கத்திய போட்டுவிட்டு கொலையாளி தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த மாணவன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில் நேற்று மாலை வீட்டை விட்டு சென்றார் பிளஸ் 2 மாணவன் கோகுல்ராஜ் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் அவர்கள் பெற்றோர்கள் அவரை தேடி வந்துள்ளனர் இந்நிலையில் இன்று அதிகாலை கீரனூர் புறவழி சாலையில் இருந்த நிலையில் பிளஸ் டூ மாணவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .
பின்னர் போலீசார் விசாரணையில் பிறந்தநாள் விழா கொண்டாட சென்றதாகவும் தெரியவந்துள்ளது இதில் ஏதாவது தகராறு ஏற்பட்டு இவர் கொலை செய்யப்பட்டாரா ? இல்லை காதல் விவகாரத்தில் பிளஸ் டூ மாணவன் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டு மதுபோதையில் இருக்கும்பொழுது கொலை செய்யப்பட்டாரா ? என்ற கோணத்திலும் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளஸ் டூ படிக்கும் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.