- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பாளையங்கோட்டை, அரசு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் குடியிருப்பு பகுதியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!
பாளையங்கோட்டை, அரசு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் குடியிருப்பு பகுதியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!
மேலப்பாளையம் ஹஸன்
UPDATED: May 14, 2023, 11:49:01 AM
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியில், அங்குள்ள மசூதிக்கு பின்புறம் அமைந்துள்ள, தமிழ்நாடு அரசு ஓட்டுநர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் குடியிருப்பில், இன்று ( மே.14) அதிகாலையில், பலன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, நடைபெற்றது.
திருநெல்வேலி ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர், கே.எம்.ஏ. நிஜாம் தலைமை வகித்தார். நலச்சங்கத்தலைவர் சாமி.நல்லபெருமாள் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில், இரா.மாயாண்டி பாரதி, பா. லெட்சுமணன், டி.வி.அனந்த ராமன், சைமன் தேவதாஸ், அன்சாரி, மு.ராம்குமார், மா. முத்துராமன், பாலசுப்ரமணியன், சுடலைமுத்து, மா.சிவக்குமார்,அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு, ஆளுக்கொரு மரக்கன்று நட்டுவைத்து, சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக, மருதம், கடம்பம், நாவல், வேங்கை உள்ளிட்ட, பல்வேறு பலன்தரும் மரங்களின் கன்றுகளை,
தமிழ்நாடு வனத்துறையினருக்கு, விலையில்லாது வழங்கி, உதவினர். இதற்காக, குடியிருப்பு நலச்சங்கம் சார்பாக, அதன் நிர்வாகிகள், வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கான, அனைத்து ஏற்பாடுகளையும், லெ.பாலச்சந்திரன் மிகச்சிறப்பாக செய்து இருந்தார்.