பெட்ரோல் பங்க் பெண் ஊழியர்களை ஆபாசமாக திட்டி தாக்கிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஒரு மேற்பார்வையாளர் தினேஷ் மற்றும் மூன்று பெண் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் போட்டுள்ளனர் .
அப்போது அந்த இளைஞர்களிடம் பெண் ஊழியர் ஒருவர் பெட்ரோலுக்கான பணத்தை கேட்டபோது அந்த பெண ஊழியரை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளனர்.
இதனை மேற்பார்வையாளர் தினேஷ் என்பவரிடம் கூறியதன் அடிப்படையில் மேற்பார்வையாளர் அந்த இளைஞரை தட்டிக் கேட்ட பொழுது அந்த இளைஞர்கள் மேற்பார்வையாளர் தினேஷ் என்பவரை துரத்திச் சென்று சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்த கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய்.
20,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
இதைப்பற்றி மேற்பார்வையாளர் தினேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பெயரில் உளுந்தூர்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து ஊழியர் ஒருவர் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்