நிரந்தரமாக EO அதிகாரி தேவை எதிர்பார்ப்புடன் கோம்பை மக்கள்.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கோம்பை பேரூராட்சியில் 15வார்டு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக பேரூராட்சி செயல் அலுவலர் இல்லை வருபவர்கள் ஒரு இரு மாதம் மட்டுமே பணியில் இருந்து விட்டு வேறு இடம் மாறிச் சென்று விடுகின்றனர்.
இதனால் கோம்பை பேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை தற்போது திமுக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போதும் இந்த நிலை தொடர்வதால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய திட்டமிட்ட நிலையில் இன்று தேனி மாவட்டம் பேரூராட்சிகள் இயக்குனர் அவர்கள் மற்றும் கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் ந.இராமகிருஷ்னன் அவர்களின் தலைமையில் கோம்பை பேரூராட்சி மன்றத் தலைவர் மோகன் மற்றும் செயல் அலுவலர் (பொறுப்பு) குலோத்துங்கன் மற்றும் பிற அதிகாரிகளும் ஊர் பொதுமக்கள் கூட்டம் நடைபெற்றது .
வருகிற வாரத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகளையும். நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
தேனி செய்தியாளர்: இரா.இராஜா