• முகப்பு
  • crime
  • பெரம்பலூரில் கஞ்சா நாளுக்கு நாள் அச்சமடையும் மக்கள்.

பெரம்பலூரில் கஞ்சா நாளுக்கு நாள் அச்சமடையும் மக்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் அவர்களின் தலைமையில் இன்று 18.07.2022-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் தனிப்படை அமைத்து குன்னம், வேப்பூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வந்த நிலையில் நன்னை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பொருளான சுமார் 260 கிராம் அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்தும் மேலும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த முருகானந்தம் 24/22, S/o வேலாயுதம், எண் 180, மேற்கு தெரு, நன்னை, குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் என்ற நபரை கைது செய்தும் அவர் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தும் காவல் நிலையம் அழைத்து வந்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் அவரது குழுவினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்கள் பெரிதும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended