Author: THE GREAT INDIA NEWS

Category: district

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலியில் , தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 10-ம் அணி உள்ளது . இங்கு காவல் ஆய்வாளராக இருந்து வரும் குமார் என்பவர் தனது சொந்த வேலைக்காக காவல் துறைக்கு சொந்தமான வாகனத்தை எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார் . தனது வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்ற பொழுது அந்த வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. சிறிது நேரம் வாகனத்தின் ஓட்டுநர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை , தொடர்ந்து காவல் ஆய்வாளர் குமார் மற்றும் அங்கு இருந்தவர்கள் அந்த வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்து புறப்பட்டுச் சென்றார். கரகாட்டக்காரன் பட பாணியில் வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்து காவல்துறை ஆய்வாளர் புறப்பட்டு சென்றதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.

Tags:

#இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kallakurichinewstodaytamil #kallakurichiflashnewstamil
Comments & Conversations - 0