• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • புழுக்களுடன் சேர்ந்து அசுத்தமான குடிநீரை தொடர்ந்து விநியோக செய்ததால் மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

புழுக்களுடன் சேர்ந்து அசுத்தமான குடிநீரை தொடர்ந்து விநியோக செய்ததால் மக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேஷாக்

UPDATED: May 7, 2023, 5:14:38 PM

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நடு வனந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் டேங்க் பழுதாகிவிட்டது. இதனால் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில்  புழுக்களும் சேர்ந்து வந்தது.

இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நடுவனந்தல் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் சாலையில்  திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்த ரோசனை ஆய்வாளர் அன்னக் கொடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சாலை மறியல் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப் படும் என உறுதியளித்தனர்.

இதனை அடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்கள் கூறுகையில், நீர்த் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது, இது பாழடைந்து, டேங்கின் மேல் தளம் உடைந்து பறவைகளின் எச்சம் மற்றும் குப்பைகள் விழுகின்றன. மேலும், இந்த டேங்கில் புழுக்களும் இருக்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் எங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது இதனை குடிப்பதால் நோய் தொற்று ஏற்படுகிறது.

இது குறித்து அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ., அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு விரைந்து தீர்வு கிடைக்கவில்லை எனில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended