• முகப்பு
  • வானிலை
  • வேலூரில் வெளுத்து வாங்கிய மழை  குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி!

வேலூரில் வெளுத்து வாங்கிய மழை  குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி!

வாசுதேவன்

UPDATED: May 5, 2023, 1:42:48 PM

வேலூர் மாநகரில் கடந்த சில நாட்களாக வெய்யில் தொடர்ந்து பொதுமக்களை வாட்டி வதைத்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓரளவு மழை பெய்தது.நேற்று முன்தினம் 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் 96.1 டிகிரி வெய்யில் பதிவானது.

இந்த நிலையில் நேற்று 5-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 20 நிமிடம் வேலூரில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் பழைய பஸ் நிலையம், மண்டித் தெரு சாலையோரத்தில் கழிவுநீருடன் மழைநீர் பேலஸ் கபே எதிரில் தேங்கியது. இதனால் 2 சக்கர வண்டிகள், ஆட்டோக்கள், பஸ்கள் சாக்கடைநீரை பொதுமக்கள் மீது வாரி இறைத்து சென்றன.

இதன் காரணமாக சித்திரை பெளர்ணமி இரவில் வேலூரில் குளிர்ந்த காற்று வீசியது, இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended