பள்ளி கட்டிடத்தை காலி செய்ய விடாமல் பெற்றோர்கள் போராட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
நெல்லை டவுணில் உள்ள உசேனியா தொடக்கப் பள்ளிக்கூட கட்டிடம், டவுண் ஆசாத் ரோட்டில் உள்ள சுன்னத்துல் ஜமாஅத் ஜாமியா மஸ்ஜித்-க்கு சொந்தமானது என்றும் அதை காலி செய்து ஒப்படைக்கவேண்டும் என உசேனியா பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜமாத் நிர்வாகி ஒருவரின் வழக்கிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது
அதை கண்டித்து உசேனியா பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள், நீதிமன்றத்தில் ஜமாத்தினர் போலியாக வழக்கு நடத்தி தீர்ப்பு பெற்று விட்டனர் என்றும் எங்களின் பிள்ளைகளை இந்த பள்ளியில் தான் படிக்க வைப்போம் என்றும் பள்ளி கட்டிடத்தை காலி செய்ய விடமாட்டோம் என போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் பாஸ்கர்.