பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் ஊராட்சித் மன்ற தலைவர்கள்
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார், மேலும் அக்கிராம மக்களிடம் விசாரிக்கையில், எங்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்து வருவது குடிநீர் தட்டுப்பாடு, மற்றும் கழிவுநீர் தேக்கம் , இது பற்றி ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்த உடன் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்கிறார்.
ஒரு சில பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது அவற்றை இன்னும் சில நாட்களில் சரி செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார் என்றும் பொது மக்கள் தெரிவித்தனர் .
மேலும் சிறப்பாக பணியாற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் அண்ணாதுரை கவுன்சிலர் கொடியரசு ஆகியோரை சந்தித்து பேசுகையில் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் நாங்கள் பொது மக்களின் நனுக்காக உடனடி தீர்வு காண முற்படுவோம் என்று கூறினார்கள்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.