• முகப்பு
  • crime
  • எஸ்.ஒகையூர் கிராமத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் தற்காலிக பணி நீக்கம் !

எஸ்.ஒகையூர் கிராமத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் தற்காலிக பணி நீக்கம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் தியாகதுருகம் அருகே உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அவர்களுக்கு விவசாயிகளிடமிருந்து புகார் பெற்றதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் விழுப்புரம் மண்டல தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மேலாளர் உடனடியாக எஸ்.ஒகையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதன்படி விழுப்புரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் எஸ்.ஒகையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து எஸ்.ஒகையூர் நேரடி நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended