- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பி.செல்வம் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளராக பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பி.செல்வம் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளராக பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
மகேஷ் பாண்டியன்
UPDATED: May 5, 2023, 2:40:28 PM
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி புதிய ஆணையாளராக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வந்த பி.செல்வம் அவர்கள் இன்று ( 5-5-23) முதல் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கு முன்னதாக இருந்த சத்தியமங்கலம் நகராட்சி பொறியாளர் (ஆணையாளர் பொறுப்பு) அ.ரவி அவர்கள் நகராட்சி நிர்வாகம் பணி பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார்.
புதியதாக பொறுப்பு ஏற்றுக்கொணட செல்வம் அவர்களுக்கு நகராட்சி நகர்மன்ற தலைவி ஆர்.ஜானகி ராமசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.