4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’...சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.
கோபிநாத்
UPDATED: May 2, 2023, 12:33:06 PM
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சேலம், நாமக்கல் உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழையும், 14 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.