• முகப்பு
  • pondichery
  • ஓ.பி.எஸ். தமிழகத்தில் கொள்ளை அடித்த பணம் புதுச்சேரியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். தமிழகத்தில் கொள்ளை அடித்த பணம் புதுச்சேரியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஓ.பி.எஸ்-ஸின் பினாமியாக புதுச்சேரி அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் செயல்படுவதாக குற்றம் சாட்டிய அன்பழகன் ஓ.பி.எஸ்ஸின் பினாமியாக உள்ள ஓம் சக்தி சேகர் அரியூர் பகுதியில் 30 கோடி ரூபாயில் சொத்து வாங்கி உள்ளதாகவும் கூறிய அவர் தமிழகத்தில் ஓபிஎஸ் கொள்ளையடித்த பணத்தை புதுச்சேரியில் முதலீடு செய்து உள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஒற்றை தலைமையை பெற பச்சோந்தி தனமாக செயல்பட்டு குள்ளநரி வேஷம் போட்டு ஒட்டுமொத்த சூழ்ச்சியோடு ஓ.பி.எஸ் வளம் வருவதாக அன்பழகன் விமர்சனம் செய்த அன்பழகன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் துரோகிகள் தான் என்றார். பேட்டி; அன்பழகன், அதிமுக, மாநில செயலாளர் கிழக்கு பிரிவு, பாண்டிச்சேரி நிருபர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended