• முகப்பு
  • அரசியல்
  • அத்திப்பட்டு திமுக சார்பில் கோடை வெயில் தாகத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தல் திறப்பு

அத்திப்பட்டு திமுக சார்பில் கோடை வெயில் தாகத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தல் திறப்பு

L.குமார்

UPDATED: May 21, 2023, 11:08:14 AM

அத்திப்பட்டு திமுக சார்பில் கோடை வெயில் தாகத்தை தணிக்கும் விதமாக தண்ணீர் பந்தல் திறப்பு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தலை திறந்து வருகின்றனர். 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உத்தரவின்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சி திமுக சார்பில்,

தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் திமுக ஊராட்சி செயலாளருமான எம் டி ஜி கதிர்வேல் ஏற்பாடுகள் செய்திருந்தார், மற்றும் அத்திப்பட்டு ஊராட்சி திமுக நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்..

VIDEOS

RELATED NEWS

Recommended