• முகப்பு
  • குற்றம்
  • திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையை விட்டு விட்டு  மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது.

திருவள்ளூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒன்றரை வயது கைக்குழந்தையை விட்டு விட்டு  மனைவி தூக்கிட்டு தற்கொலை : கணவன் கைது.

சுரேஷ்பாபு

UPDATED: May 16, 2023, 9:17:30 AM

திருவள்ளூர் அடுத்த ஒண்டிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத்(28).  இவர் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 

இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான பவானி என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது. 

இந்நிலையில் படப்பை பகுதியில் பணியாற்றி வரும் பிரசாந்துக்கு அதே தொழிற்சாலையில் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இதனால் பவானி மற்றும் பிரசாத் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில் கடந்த ஒரு வருடமாக மனைவியிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் வீட்டிற்கு வருவதை தவிர்த்து வந்துள்ளார். 

இது குறித்து மனைவி பவானிக்கு தெரியவரவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதனிடையை கள்ளக்காதலி கவிதா பிரசாத்தின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனக்கும் பிரசாத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது என்றும் , தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவரை ஏன் வீட்டிற்குள் வைத்து பூட்டி வைத்துள்ளீர்கள்.  

அவரை விருப்பம் போல் வாழ வழி விடுங்கள் என பிரசாந்தின் மனைவி பவானியிடம் கள்ளக்காதலி கவிதா பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.  மேலும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு வருட காலமாக குழந்தையை கூட பிரசாத் தூக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (14-ந் தேதி ) இரவு கணவனுடன் தொலைபேசியில் பேசிய பவானி அவரது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை அறிந்த பவானியின் உறவினர்கள் உடனடியாக  அவரது உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  இது குறித்து தகவல் அறிந்த பவானியின் பெற்றோர் சம்பவம் குறித்து மணவாள நகர் போலீசில் புகார் அளித்தனர்.   

புகாரின்பேரில் கணவர் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஒன்றரை வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவண் மற்றொரு பெண்ணிடம் தொடர்பு இருந்ததால் மன உளைச்சலில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended