கும்பகோணத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணத்தில் நம் பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.மிகவும் சவாலான சூழ்நிலையிலும், செவிலியர்களின் சிறப்பான பணிக்காக அனைத்து செவிலியர்களுக்கும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்களின் கண்காணிப்பாளர் செந்தாமரைச் செல்வி மற்றும் உமா மகேஸ்வரி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றுக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்நிகழ்ச்சி நிலைய அலுவலர் மருத்துவர் பிரபாகரன் கண்காணிப்பாளர் மருத்துவர் கமரூல் ஜமான் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜிஆர்டி தங்க மாளிகை சார்பில் சுவர் கடிகாரம் மற்றும் இனிப்புகள் வழங்கினார்கள்.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.