தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தமிழக அரசிடம் நீதி கேட்டு வீதிதோறும் பாதயாத்திரை .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பைபாஸ் முதல் அம்பேத்கர் சிலை (கிராமச் சாவடி ) வரை தங்களின் கோரிக்கைகளை வலியுருத்தி நடைபயணம் மேற்க்கொண்டனர்.
அன்னமிட்ட கைகளை கின்னமேந்த வைப்பதா சமூக நீதி என்ற துண்டு பிரசுரங்களை வினியோகித்துக் கொண்டு, எங்களுக்கு நிரந்தரமாக பணி வேண்டும், என்றும் தமிழக முதல்வரிடம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஜுன் 10ம் தேதி திருச்சியில் கோரிக்கை மாநாடும், ஜுலை 15ல் வாழ்வாதார உரிமையும் வரையறுக்கப்பட்ட ஊதியம் கேட்டு மாவட்ட தலைநகரில் பல்லாயிரக்கனக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணியும், ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து நீதி கேட்பதும் இன் நிகழ்வுகள் நடக்க இருப்பதையும் நடை பயணத்தின் மூலம் தெறிவித்தனர்.
இன் நிகழ்வில் மாவட்ட தலைவர் .ரவி .முருகன், குமரன். மற்றும் உத்தமபாளையம் தலைவர் கலைச்செல்வி.செயலாளர் சாந்தி மற்றும் சங்க நிர்வாகிகள், ஊழியர்களும் நடை பயணத்தை மேற்க்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜீவா