மர்மமான முறையில் இறந்த ஸ்ரீமதிக்கு நீதி வேண்டியும் , சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இடக்கோரியும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
*இன்று 17-07-2022*
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி பள்ளியில் மர்மமான முறையில் இறந்த ஸ்ரீமதிக்கு நீதி வேண்டியும் , சிபிஐ விசாரணைக்கு உத்தரவு இடக்கோரியும் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில பொருளாளர் பாண்டுரங்கன் மாநிலத் துணைச் செயலாளர் முருகானந்தம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கலை இலக்கிய பேரவை மாவட்ட செயலாளர் முருகேசன் கிராமத்து தெருக்கூத்து பேரவை திட்டக்குடி தொகுதி செயலாளர் ராயர் மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் கிளை நிர்வாகிகள் பழனிமுத்து சின்னஏட்டு சாமிதுரை (மற்றும்) பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி