முதல்வரின் கள ஆய்வுக்குப் பிறகு மூன்று மாவட்டங்களில் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
நா.வேலாயுதம்
UPDATED: Apr 30, 2023, 7:49:50 PM
முதல்வரின் கள ஆய்வு ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய இயக்குனர் எஸ்.செல்வராணி அவர்களும்,
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் அவர்கள் மாற்றப்பட்டு புதிய வருவாய் அலுவலராக ராஜசேகரன் அவர்களும்,
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி அவர்கள் மாற்றப்பட்டு புதிய அலுவலராக கிருஷ்ணபிரியா அவர்களும்,
மற்றும் விழுப்புரம் நகர டி.எஸ்.பி பார்த்திபன் அவர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.