சிறுவர் பூங்கா அமையும் இடத்தில் ஆக்கிரமிப்புகள்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட மிஸ்ரிநகருக்கு சொந்தமாக புத்தேரி ஊராட்சி கொடுக்கப்பட்ட பகுதியில் உள்ளபொது இடத்தில் சிறுவர்கள் பூங்கா அமைக்க கோரி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் நிதி ஒதுக்காமல் காலம்தாழ்த்தி வந்தார்கள்.
இதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியதில் வெளியாட்கள் சிலர் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் வருவாய்துறை மூலம் வெளியேற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பொய்யான உண்மை தன்மை இல்லாத தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவே தமிழக அரசு தலையிட்டு இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறுவர்கள் பூங்கா அமைத்து தரும்படி அப்பகுதி சமூக ஆர்வலர் இரா.வெங்கடேசன் மிஸ்ரிநகர் சமூக நல கூட்டமைப்பு குழு சார்பில் கேட்டுக் கொண்டனர்.