என்எல்சி நிறுவனம் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு , குடிநீர் வழங்க மறுப்பதால் இதனை எதிர்த்து போராட்டம் .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை கண்டித்து இன்று 2வது சுரங்கம் முன்பு அனைத்துக் கட்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக புவனகிரி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ A.அருள்மொழிதேவன் கண்டன உரையாற்றினார், இதில் மந்தாரக்குப்பம், ஐடிஐ நகர் , திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல கிராமங்களில் என்எல்சி நிறுவனம் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு , குடிநீர் வழங்க மறுத்து வருகின்றனர் .
அதை கண்டித்து என்எல்சி நிறுவனத்தில் திடீர் போராட்டம் நடைபெற்றது .
செய்தியாளர் ஆதி .அபினேஷ்