• முகப்பு
  • ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 9 பேர் திடீர் மயக்கம் ,வாந்தி எடுத்ததால் பரபரப்பு ?

ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 9 பேர் திடீர் மயக்கம் ,வாந்தி எடுத்ததால் பரபரப்பு ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒரத்தநாடு : ஒரத்தநாடு பெண்கள் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகளான வினிதா 19, ஜனனி 18, முத்துலட்சுமி 18, சிவரஞ்சனி 19, கிருஷ்ணவேணி 18, இளையராணி 19, சாரதா 19, தீட்சண்யா 18, பூமிகா 18, உள்ளிட்ட 9 மாணவிகள் காலை உணவு உண்டனர்,சிறிது நேரத்தில் புட் பாய்சன் ஏற்பட்டதில் , ஹாஸ்டல் வளாகத்திற்குள் மயங்கி விழுந்த மாணவிகளை கண்ட மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். மயங்கி விழுந்த மாணவிகளை உடனடியாக ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் இருக்கும் மாணவிகளை கல்லூரி முதல்வரோ அல்லது விடுதி வார்டன் பார்க்க கூட வராதது வருத்தமளிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் செய்தியாளர் மோகன். இன்றைய செய்திகள் ஒரத்தநாடு தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,sengam news,breaking sengam news,latest thiruvannamalai news,

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended