பல்வேறு மாவட்டங்களில் நடந்த செய்திகள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரை : கூடல் நகரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. வாடிபட்டியில் உள்ள டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்ற போது ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. அதனை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். 3 மணி நேரமாக ரயில்வே சேவை பாதிப்பு. மாற்று ரயில் பாதை மூலம் சேவை துவக்கம். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. தருமபுரி : சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிருக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி வழங்கினார். கோவை : தனியார் மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதி அறையில் 4ம் ஆண்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதி அறையில் தங்கியிருந்த மாணவி நந்தினி பிளேடால் கையை அறுத்தும், பின்னர் தூக்கு மாட்டியும் இறந்துள்ளார். மாணவி நந்தினியின் தற்கொலை குறித்து சென்னையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை : அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு பகுதியில் பட்டப்பகலில் கார்த்திக் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 7 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் இளைஞர் கார்த்திக் உயிரிழந்தார் விருதுநகர் : சாத்தூர் அருகே கார் மோதி சாலைத்தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் பலியாகினர். தொழிலாளர்கள் செல்வபாண்டி, கருப்பசாமி ஆகியோர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் : ராஜபாளையம் அருகே தாட்கோ காலனியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த மாதுளையை எடுக்கமுயன்ற போது தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. தருமபுரி : விதிமீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி டி.ஆர்.அன்பழகனின் தார் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அளவுக்கு அதிகமான புகை மாசு ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது. கரூர் : பரமத்தியிலுள்ள கல்குவாரியில் லாரி மீது 40 டன் எடைகொண்ட பாறை சரிந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் சிக்கியுள்ள ஓட்டுனரை மீட்க தீயணைப்பு துறையினர் முயன்றனர். பாறை சரிந்ததால் குவாரிக்குள் பணியிலிருந்த மேலும் இரண்டு ஜேசிபி ஓட்டுனர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை : சுப்பிரமணியபுரம், வசந்தம் நகர், ஆண்டாள்புரம் ஆகிய இடங்களில் பூட்டி கிடந்த 2 வீடுகள் மற்றும் ஒரு செல்போன் ரீசார்ஜ் கடையில் கடந்த மாதம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக பள்ளி மாணவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamklnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news

VIDEOS

RELATED NEWS

Recommended