எழிலன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னையில் கடந்த 23ம் தேதி தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய மக்கள் சபை எனும் விவாத நிகழ்ச்சியில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல், வன்முறையை தூண்டிய எழிலன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்ற கண்டன முழக்கங்களை எழுப்பினர் முன்னதாக திமுகவை கண்டித்து திருவாரூரில் புதிய தமிழகம் கட்சியினர் நோட்டீஸ் ஒட்டி இருந்தனர் இந்த நோட்டீசில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் ஒட்டபட்டிருந்தது.
இந்த நிலையில் திருவாரூர் நகர்ப்பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.