• முகப்பு
  • district
  • கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தி புது ஆடைகள் வழங்கப்பட்டன .

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தி புது ஆடைகள் வழங்கப்பட்டன .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிறப்பு நிலை பேரூராட்சி அண்ணாமலைநகர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்தி அவர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்பட்டன . முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி மற்றும் செயல் அலுவலர் பாலமுருகன் பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர். பின்பு ஊர்வலமாகச் சென்று பேரூராட்சி எதிரில் உள்ள குளத்தை சுத்தப்படுத்தினர் ,குளம் மிகவும் சீர்கெட்டு இருந்ததை மிக விரைவில் புதுப்பொலிவுடன் நடைபாதை அமைத்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவோம் என்று கூறினார் . இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended