கழிவறை இல்லாததால் தற்கொலை செய்த புது மணப்பெண்!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்தது குறித்து காவல்துறை விசாரித்ததில், கணவன் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் பலமுறை சொல்லியும் கணவன் கண்டு கொள்ளாததால் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் ரம்யா.
தாய் வீட்டுக்குச் சென்ற ரம்யாவை சமாதானப்படுத்தி அழைத்துவர சென்றுள்ளார் கணவர், அப்போது வேறு வீடு பார்க்க சொன்னதற்கு கணவன் சண்டையிட்டதால் அவர் தற்கொலை செய்ததாகத் தெரிகிறது.
செய்தியாளர் பாஸ்கர்