கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக தேசிய குழந்தைகள் நலவாரியத் தலைவர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடர்பாக நீதி கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பள்ளிகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு, பள்ளியிலுள்ள ஆவணங்களும் பொருட்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட நிலையில் , மாணவி உயிரிழப்பு தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாகவும் பள்ளியில் விதிமுறைகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தலைவர் பிரியங்கானுங்கோ உட்பட தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் 2-பேர், மாநில ஆணைய குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழு மாவட்ட ஷர்வன்குமார் ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ஸ்ரீமதி உயிரிழந்த இடம் மற்றும் பள்ளி வளாகம் மாணவியர் தங்கியிருந்த விடுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர் பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் அதனைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.