• முகப்பு
  • crime
  • மணப்பாறையில் டாஸ்மாக் மதுக்கடையில் கொள்ளை முயற்சி ஈடுபட்ட மர்ம நபர்கள். சிசிடிவி இருப்பதைப் பார்த்து ஓட்டம் !

மணப்பாறையில் டாஸ்மாக் மதுக்கடையில் கொள்ளை முயற்சி ஈடுபட்ட மர்ம நபர்கள். சிசிடிவி இருப்பதைப் பார்த்து ஓட்டம் !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள காய்கனி மார்க்கெட் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இன்று மதியம் கடை பணியாளர் வழக்கம் போல் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனே இதுபற்றி மணப்பாறை போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் கடைக்குள் சென்று பார்த்த போது முதல் நாள் வியாபாரமாக 2 லட்சத்து 10 ஆயிரத்து 320 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள் அப்படியே இருந்தது. பணம் மற்றும் மதுபாட்டில்கள் எதுவும் கொள்ளை போகாத நிலையில் கொள்ளை முயற்சி மட்டும் நடந்திருப்பது தெரியவந்தது. கடையில் சிசிடிவி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடையை திறக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிசிடிவி இருப்பதை பார்த்து விட்டு கொள்ளையில் ஈடுபடாமல் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. ஆனால் கொள்ளையர்கள் குறித்த காட்சிகள் எதுவும் சிசிடிவியில் பதிவாக வில்லை. மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended