உளுந்தூர்பேட்டையில் என் குப்பை எனது பொறுப்பு திட்டம் சைக்கிள் விழிப்பணர்வு பேரணி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு என் குப்பை எனது பொறுப்பு திட்டத்தைக் குறித்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஜெ.மணிக்கண்ணன் சைக்கிள் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அப்பொழுது பேரணியில் கலந்து கொண்ட நூறுக்கும் மேற்பட்டோர் நகராட்சி முழு சுகாதாரத்தை வலியுறுத்தி அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு மணிக்கூண்டு திடலில் இருந்து பேருந்து நிலையம், உழவர் சந்தை, கிழக்கு கந்தசாமி புரம் என முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் நகராட்சித் தலைவர் திருநாவுக்கரசு,
ரோட்டரி சங்க தலைவர் நகரமன்ற நகர மன்ற துணைத்தலைவர் வைத்தியநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.