• முகப்பு
  • crime
  • பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள புண்ணியமூர்த்தி முகமூடி அணிந்த மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை.

பல்வேறு குற்ற வழக்குகளில் உள்ள புண்ணியமூர்த்தி முகமூடி அணிந்த மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே உள்ள களஞ்சேரியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 42) இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்த போது இன்று காலை கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்திவிட்டு நின்று கொண்டிருந்த போது புண்ணிய மூர்த்தியை முகமூடி அணிந்த இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியது. இதில் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார். தகவலயறிந்த உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் புண்ணியமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இப்படுகொலை சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை அனுப்பி தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended