அரித்வாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் முத்துக்குமார் (24), பயணிகள் ரயில் முன்பு நின்று தற்கொலை.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணத்தில் தாராசுரம் ரயில்வே கேட் அருகே இன்று காலை திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் பயணிகள் ரயிலில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, அரித்துவாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (24) தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில், ரயில் வந்து கொண்டிருக்கும் போது, ரயில்வே டிராக்கில் நின்று தற்கொலை செய்து கொண்டார்.
எதிர்பாராவிதமாக இக்காட்சியை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இது நெஞ்சை பதை பதைக்க செய்கிறது இச்சம்பவம் குறித்து, இருப்புப்பாதை காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று மாத்திகேட் பகுதியில் ஐடி துறையில் பணியாற்றும் கோபிநாத் (28) என்ற இளைஞர் ரயிலில் சிக்கி பலியான நிலையில், தொடர்ந்து இன்றும் ஒரு இளைஞர் (முத்துக்குமார்) பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினையும், சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.