பாஜக வின் மத்தியசென்னை மாவட்டநிர்வாகி கொலை .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பாஜக வின் மத்தியசென்னை மாவட்டநிர்வாகி கொலை செய்யப் பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவரது உயிருக்கு ஆபத்துள்ளது என்பதால் கடந்த சுமார்இரண்டு ஆண்டுகளாக போலீஸ்பாதுகாப்பு கொடுக்கப் பட்டிருந்தநிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
பாஜக வின் மத்தியசென்னை மாவட்டத்தின் பட்டியலின அணியின்தலைவராக இருப்பவர் சிந்தாதரிப்பேட்டையைச்சேர்ந்த பாலச்சந்தர். இவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த வேறுசிலருக்கும் முன் விரோதம் இருந்ததாகக்கூறப்படுகிறது.
இதை அடுத்து கடந்த இரண்டாண்டுகளாக அவருக்கு காவல் துறை பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
இந்நிலையில், காவல் துறை இவரது காவலுக்காக நியமித்திருந்த தனி பாதுகாப்பு அலுவலர் உடன் இருக்கும்போதே சிந்தாதிரி பேட்டை மீன்மார்க்கெட் அருகே இன்று இரவு சுமார் 8 மணியளவில், இவரை சராமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
பொது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சிந்தாதிரிப் பேட்டை பகுதியில் இந்தகொலை நடை பெற்றுள்ளது.
மேலும் கொலைநடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில்தான் சிந்தாதிரி பேட்டை காவல்நிலையம் மற்றும் திருவல்லிக் கேணி துணை ஆணையர் அலுவலகம் ஆகியவையுள்ளன.
இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் பாலச்சந்தரை கொடூரமாக வெட்டிப் படு கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளதென்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக காவல்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக ராஜீவகாந்தி அரசுபொது மருத்துவ மனையில் வைக்கப் பட்டுள்ளது.
செய்தியாளர்
பா. க. ஸ்ரீதேவி