• முகப்பு
  • குற்றம்
  • ஆரோவில் அருகே பொம்மையார் பாளையம் பகுதியில் வாலிபரை வெட்டி படுகொலை!

ஆரோவில் அருகே பொம்மையார் பாளையம் பகுதியில் வாலிபரை வெட்டி படுகொலை!

முகேஷ்

UPDATED: May 30, 2023, 9:58:53 AM

விழுப்புரம்:- வானூர் வட்டம் ஆரோவில் அருகே! பொம்மையார்பாளையம் பகுதியில் வாலிபரை வெட்டி படுகொலை! கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர் கிழக்கு கடற்கரை சாலை கீழ்புத்துப்பட்டு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மீசை கிருஷ்ணமூர்த்தி (மீனவர்) என்பவரின் மகன் விமல் ராஜ் (34) இவர் பொம்மையார் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை லாசுப்பேட்டை பகுதிகளில் பிரபல ரவுடி அன்பு ரஜினி என்பவரின் கொலை வழக்கில் தொடர்பு இருந்ததாக கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு விமல் ராஜியின் அண்ணனை அன்பு ரஜினி கூட்டாளிகள் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக அன்பு ரஜினி கூட்டாளிகள் விமல் ராஜையும் தற்போது கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது...?

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended