• முகப்பு
  • crime
  • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருத்துறைப்பூண்டி அதிமுக அவைத்தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திருத்துறைப்பூண்டி அதிமுக அவைத்தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்…

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகர அதிமுக அவைத்தலைவராக இருந்து வருபவர் வழக்கறிஞர் அன்பரசன். இவர் பொதுப்பணித்துறையில் மூலம் நடத்தப்படும் டெண்டரில் தொடர்ந்து அதிகாரிகள் ஒரு தரப்புக்கு ஆதரவாக முறைகேட்டில் ஈடுபட்டுவந்துள்ளதை வழக்கறிஞர் என்ற பெயரில் அன்பரசன் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மகும்பல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குண்டர்களை ஏவி அன்பரசனை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலைசெய்ய முற்பட்டுள்ளனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை விரட்டியதோடு, அன்பரசனை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்துள்ள திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கொலைவெறி தாக்குதலில் தொடர்புடையவர்களை அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதவினை கொண்டு தேடி வருகின்றனர். திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended