சினிமா பாணியில் கொலைகாரன் கைது.!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த கோவிந்தன் பட்டியில் கடந்த 13 .6 .2022 தேதி அன்று இரவு பிராந்தி குடிப்பதற்கு பணம் கொடுக்காத காரணத்தினால் தனது தாய்மாமனார் மரியதாஸ் என்பவரை மண்வெட்டி கணையால் தாக்கி கொலை செய்துவிட்டு ,
காவல்துறைக்கு கண்ணாமூச்சி காட்டிவிட்டு சென்ற பல்வேறு திருட்டு வழக்கில் குற்ற பின்னணி மற்றும் தண்டனை பெற்று வெளியில் இருந்த கோவிந்தன் பட்டியைச் சேர்ந்த குமார், ஜெயக்குமார், கருவாயன் வயது 23 என்பவரை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே அவர்களும்
மற்றும் உத்தமபாளையம் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்களின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மற்றும் தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவியுடன் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த குற்றவாளியை சினிமாவை மிஞ்சிய வகையில் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் க.சிலைமணி தலைமையில் காவல் துறை குழு கைது செய்தது.
இன்று குற்றவாளி தேனி மாவட்டம் கொண்டு வரப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டன். மேலும் உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் க. சிலைமணி அவர்களின் சிறப்பான பணிகளை பார்த்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.
தேனிமாவட்ட செய்தியாளர் MP. ஜீவா, மாவட்ட புகைப்படதாரர் மு.ரங்கநாதன்.