• முகப்பு
  • district
  • ​புதிதாக கட்டப்பட்டுள்ள 36 வீடுகளை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க நகராட்சி நிர்வாக ஆணையர்க்கு கடிதம் எழுதினார் - தொல்.திருமாவளவன்

​புதிதாக கட்டப்பட்டுள்ள 36 வீடுகளை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க நகராட்சி நிர்வாக ஆணையர்க்கு கடிதம் எழுதினார் - தொல்.திருமாவளவன்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சிதம்பரம் அருகே உள்ள வடக்கு மெயின் ரோட்டில் உள்ள புதிதாக கட்டப்பட்ட வீடுகள் சேதம் அடைந்து வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் 22.01.2021 அன்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டுள்ள 36 வீடுகளை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க நகராட்சி நிர்வாக ஆணையர்க்கு கடிதம் எழுதினார். நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் எழுதி 17 மாதம் ஆகியும் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகளை ஒதுக்கவில்லை. பல கோடிகளில் கட்டப்பட்ட குடியிருப்பு பாழாகிறது. உடன் 36 வீடுகளையும் நீர் நிலை ஆக்கிரமிப்பால் வீடுகளை இழக்க உள்ள பாலமான் கரை அம்பேத்கர் நகர் குடிசைவாசிகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டு கொள்கிறோம். சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். நன்றி வணக்கம். சிதம்பரம் நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் சமுகப்பணி சங்கம் பதிவு எண் 6/2021 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி.

VIDEOS

RELATED NEWS

Recommended