Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

மதுரையில் மண்சரிந்து தொழிலாளி பலி. மூன்று பேர் கைது. மதுரை விளாங்குடிமாநகராட்சி பாதாளசாக்கடை கழிவு நீர்குழாய் பதிக்கும் பணியில் மூன்று தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென மண் சரிவு ஏற்பட்டு ஈரோடுமாவட்டத்தை சேர்ந்த சதீஷ்என்ற தொழிலாளி மண் சரிவில் சிக்கிக்கொண்டார். இருபதடி ஆழத்தில் கீழே விழுந்தசதீஷ் மீது மணல் மூடப் பட்ட நிலையில் சதீஷை ஜே.சி.பி இயந்திரம் மூலம்மீட்க சக பணியாளர்கள் ஈடு பட்டபோது அவரின் தலை துண்டிக்கப் பட்டது. இதனையடுத்துதீயணைப்பு துறையினருக்குத்தகவல் அளிக்கப் பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு த்துறையினர் சதீஷின் உடலை, நீண்ட போராட்டத்திற்கு பிறகுமீட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரதுஉடல் மதுரை ராஜாஜி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்தவிவகாரம் குறித்து சென்னையைச்சேர்ந்த ஏ.சி.சி.பி.எல் ஒப்பந்தநிறுவன உரிமையாளர் சுந்தர பாண்டியன், மேலாளர் பாலு, பணியிடபொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ் குமார் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. அஜாக்கிரதையாக செயல் பட்டு விபத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மேலாளர் பாலு , பணியிட பொறியாளர் சிக்கந்தர், பொக்லைன் ஓட்டுனர் சுரேஷ்குமார் ஆகிய மூன்று பேரும் போலீசாரால் தற்போது கைது செய்யப் பட்டுள்ளனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0