• முகப்பு
  • political
  • சீனிவாச பெருமாள் ஆலயத்தில் கல்கருட பகவான் சன்னதியில் திருமதி வி.கே.சசிகலா இன்று சுவாமி தரிசனம்..

சீனிவாச பெருமாள் ஆலயத்தில் கல்கருட பகவான் சன்னதியில் திருமதி வி.கே.சசிகலா இன்று சுவாமி தரிசனம்..

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக விளங்கும் நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டுள்ள கல் கருட பகவானை திருமதி வி கே சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். கல் கருடனை தரிசனம் செய்தால் சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளதால், கல் கருட பகவானை தரிசனம் செய்ய திருமதி சசிகலா வந்ததாக கூறப்படுகிறது. சசிகலா நாச்சியார் கோவிலுக்கு வருகிறார் என்று தெரிந்தவுடன் அவரது ஆதரவாளர்கள் ஏராளமான அவருடன் உடன் வந்தனர் . தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பை தவிர்த்த திருமதி சசிகலா, அடுத்ததாக திருச்சேறை சாரநாத பெருமாள் ஆலயத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended