• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசத்தில் தஞ்சை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருவலஞ்சுழி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி.

பாபநாசத்தில் தஞ்சை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான திருவலஞ்சுழி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி.

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 9, 2023, 1:49:47 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதற்கு மிக சிரமம் அடைந்தனர்.

தற்போது சாலைகளை சீரமைக்கும் நடைப்பெற்று வருகிறது, இந்த நிலையில் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி சாலையை சீரமைப்பதற்காக கொட்டப்பட்ட ஜல்லி கற்களை முறையாக மட்டம் செய்யாததால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு பெய்த கனமழை காரணமாக சாலை முற்றிலும் பழுதடைந்து கப்பிகள் முழுவதும் வெளியேறி இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி சமூகஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

  • 1

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended