நடுரோட்டில் பைக்கை நிறுத்தி, பஸ்சை வழிமறித்து அலப்பறை செய்த போதை ஆசாமி.....காண்டான வாகன ஓட்டிகள்....!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளித்தலை சாலையில் குடிபோதையில் சாலையின் நடுவே பைக்கை நிறுத்தி அலப்பறை செய்த குடிமகனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே உள்ள குளித்தலை சாலையில் இன்று மது போதையில் ஒருவர் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை சாலையில் நடுவே நிறுத்தி அவ்வழியாக செல்லும், பஸ் மற்றும் லாரிகளை வழிமறித்து
ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஒன்றின் மீது கல்லெறியும் சம்பவத்திலும் ஈடுபட்டார்.
இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்த வாகன ஓட்டிகள் மதுபோதையில் இருந்தவரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் மணப்பாறை பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.