குடும்ப பிரச்சினை காரணமாக தாய் மகள் தூக்கிட்டு தற்கொலை
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த அன்பழகன் வயது 58 இவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவியும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர் இந் நிலையில் அன்பழகனுக்கும் ராணிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினைக்காக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிராணி வயது 38 அவரது தாயார் மீனாட்சி வயது 65 இருவரும் மொட்டை மாடியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்த திருவடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர் தாயும் மகளும் தூக்கிலிட்டு தற்கொலை செய்தால் இப்பகுதியில் பெரும் சோகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.